வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது..
கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கே.செல்வராஜா(55) என்பவரே மோதுண்டு பலியாகியுள்ளார்
இறந்தவரின் உடல் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.