பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊன்று கோலை பயன்படுத்துகிறாரா?

431

மகிந்த ராஜபக்ச..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச ஊன்று கோல் ஒன்றை பயன்படுத்தி வருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக மேடையில் ஏறும் பிரதமரின் புகைப்படமே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எனினும் பிரதமர் ஊன்று கோலை பயன்படுத்தவில்லை எனவும் மேடையில் ஏற அமைக்கப்பட்டிருக்கும் படிகளை பிடித்து ஏற அமைக்கப்பட்ட பிடிதாங்கி என கூறப்படுகிறது.