மகனை மீட்டுத்தருமாறு கோரி சிறீதரனிடம் கண்ணீர்விட்ட தாய்!!

589

கண்ணீர்விட்ட தாய்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர் க ண்ணீர்விட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

இன்று இரவு கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் அதே பகுதியை சேர்ந்த தாயொருவர் தனது 17 வயது மகனை மீட்டுத்தருமாறு கோரி பிரச்சாரக் கூட்டத்தில் க ண்ணீர் விட்டு க தறியுள்ளார்.

கடந்த வருடம் சாதாரண பரீட்சைக்கு தோற்றிவிட்டு குடும்ப கஸ்டம் காரணமாக முந்திரிகை விதைகளை எடுத்து விற்றுவந்த அவர் விற்ற முந்திரிகை விதைக்கான பணத்தினை பெற வீட்டில் இருந்து சென்ற எனது மகனை து ப்பாக்கி ச ன்னங்கள் வைத்திருந்தார் என கு ற்றம் சா ட்டி இரா ணுவத்தினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எவ்வித ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. வீட்டில் இருந்து காசு வாங்குவதற்காக சந்திக்கு சென்ற எனது மகனிடம் எவ்வாறு புதிய து ப்பாக்கி சன்னங்கள் வந்தது?

இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விடயம் எனது ஒரே ஒரு மகனை கடந்த 42 நாட்களாக சிறையில் விட்டு விட்டு மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றோம்.

எனவே அவரை எப்படியாவது நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும் அவருடன் சேர்த்து மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளார்கள் என க ண்ணீர் விட்டுக் க தறி உள்ளார்.

குறித்த கைது விடயத்திற்கான சட்டவிடயங்களுக்கு தான் உதவுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.