பயிற்சிப் பட்டறை..

வவுனியா சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் எழுதும் கலைஞர்களுக்கான எழுத்துப் பயிற்சிப் பட்டறை நேற்று(27.07.2020) மாலை மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நிதுஜன் பாலா வளவாளராக கலந்து கொண்டிருந்ததுடன் ஈழத்திலிருந்து இளம் படைப்பாளர்களின் எழுத்துத் திறனை விருத்தி செய்யும் நோக்கில் இடம்பெற்ற இப் பயிற்சிப்பட்டறையில் பெருமளவான இளைஞர் கலந்து கொண்டிருந்தனர்.






