விபத்தில் கொ லை செய்யப்பட்டவருக்கு குசல் மென்டிஸ் வழங்கிய உதவி!!

425

குசல் மென்டிஸ்..

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் செலுத்திய வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உ யிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டால் அது பிழையான எடுகாட்டாக மாறிவிடும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையில் உள்ள ஒப்பந்தங்களுகு்கமைய இவ்வாறான சம்பவத்தில் ஒழுக்காற்று பரிசோதனை நடத்துவதற்காக அதிகாரம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உள்ளது.

பாணந்துறையில் குசல் மென்டிஸின் வாகனத்தில் மோதுண்டு 64 வயதான நபர் ஒருவரே உ யிரிழந்தார். உ யிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் வழங்கியுள்ளார். கடந்த 6ஆம் திகதி நீதிமன்றத்தில் வைத்து அவர் இந்த பணத்தை வழங்கியுள்ளார்.

உ யிரிழந்தவரின் இறுதி கிரியை செலவினத்திற்காக 95 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணி பரப்பையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கு குசல் மென்டிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.