ஆற்று மணல் அள்ளச் சென்றவருக்கு நேர்ந்த கதி!!

368

ஆற்று மணல்..

‪ஆற்று மணல் அள்ளச் சென்றவர் முதலை கௌவியதில் மா யமாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கறுப்பாலம் முந்தானை ஆற்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி மயில்வாகனம் (வயது 48) என்பவரே கா ணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவதினத்தன்று குறித்த நபர் கறுப்புப் பாலம் முந்தானை ஆற்றிலிருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்த போது அவரை முதலை கௌவியுள்ள நிலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.