கனடாவில் தமிழ் தம்பதிகளின் சாதனை : உயர் விருது வழக்கிய கனேடிய அரசு!!

383

தமிழ் தம்பதி..

கனடாவில் கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் செய்த சேவையை கெளரவிக்கும் வகையில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் தம்பதிக்கு உயர் விருது வழங்கி கௌரவித்துள்ளது அந் நாட்டு அரசு. இந்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது.

தமிழகத்தில் செட்டிநாட்டை பூர்வீகமாக கொண்டு, மதுரையில் பிறந்தவர் வள்ளிக்கண்ணன் மருதப்பன். இவர் கனடாவின் பதிவு செய்த லாப நோக்கமற்ற கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து வருகிறார்.

வள்ளிக்கண்ணன் கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் தமிழ் நாட்டு நடனக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை இசைக் கலைஞர்களுக்காக யூடியூப் நிகழ்ச்சி செய்து பண உதவி செய்துள்ளார்.

அதே போல வள்ளிக்கண்ணன் மனைவி பார்வதி அங்கு ஊரடங்கு காலத்தில் தவித்த மாணவர்களுக்கு சுமார் 10 வாரங்கள், 40க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு விநியோகம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளிக்கண்ணன் மற்றும் பார்வதியின் இந்த சமுதாயப் பணி, சேவை மனப்பான்மையை கெளரவிக்கும் வகையில் STA EVENTS மற்றும் SUPREME GROUP OF COMPANYS KUWAIT இணைந்து கனடா நாட்டின் Real HEROES of COVID 19 என்னும் விருது வழங்கி பாராட்டி கெளரவித்துள்ளது.