பொலிஸ் நிலையத்தில் வாய்ப்பேச்சின் மூலம் து ன்புறு த்தல் : விளம்பரங்களில் நடிக்கும் பெண் முறைப்பாடு!!

607

மது குலதுங்க..

இலங்கையின் உள்ளூர் விளம்பரங்களில் தோன்றும் பெண் ஒருவர் காவல்துறை நிலையத்தில் வைத்து வாய்ப்பேச்சின் மூலம் து ன்புறுத் தப்பட்டதாக முறையிட்டுள்ளார்.

எனினும் எந்த காவல்துறை என்பதை அவர் குறிப்பிடவில்லை. மது குலதுங்க என்ற இந்தப்பெண் தமது பேஸ்புக் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

தாம் பெண் காவல்துறையினரின் பிரசன்னம் இல்லாமல் ஆண் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர் அதுவே ஒரு தமது உரிமையை மீறியச்செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12ம் திகதியன்று தமது வீட்டுக்கு வந்த காவல்துறையினர் எவ்வித ஆணைகளும் இன்றி தம்மை வி சாரணைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு தம்மை வாய்ப்பேச்சினால் நிந்தித்ததாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஏன் எதற்காக தாம் அழைத்துச்செல்லப்பட்டேன் என்ற விடயத்தை இன்னும் தாம் அறிவில்லை என்றும் மது குலதுங்க தெரிவித்துள்ளார்

தாம் இது தொடர்பில் 118 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முறையிட்டபோதும் அதன்மூலம் பதிலளித்தவர்கள் தமது நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று தம்மிடம் கூறியதாக மது குலதுங்க தெரிவித்துள்ளார்.