விபத்து..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கன்ரர் ரக வாகனம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியதில் அதன் சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், வவுனியாவிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற குறித்த கென்ரர் வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது,

சாரதியின் தூக்க கலக்கத்தில் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியைவிட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.






