மின்சாரம்..

கெரவலப்பிட்டியில் உள்ள மின்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்பட்டிருந்தது.

12.40 மணியளவில் தடைப்பட்ட இவ் மின்சார தடை இருமணி நேரத்தில் சீர் செய்யப்படும் என தெரிவித்திருந்த போதிலும் பின்னர் இரவு 8.00 மணிக்கு முன்னராக சீர் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வவுனியா மாவட்டம் உட்பட நாட்டின் சில பாகங்களில் இரவு 7.30 மணியளவில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.

திடீர் மின்சார தடை காரணமாக வங்கிகள் வர்த்தக நிலையங்கள் போன்றன பல மணிநேரமாக மின்பிறப்பாக்கியின் மூலம் இயங்கியிருந்தன.






