நல்லூர் தேர்த்திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!!

540

நல்லூர் தேர்த்திருவிழாவில்..

நல்லூர் ஆலய வளாகத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா மிகச்சிறப்பாக இன்று இடம்பெற்று வருகின்றது.

இதில் கலந்து கொண்ட 6 பேரே திருட்டுச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தாலிக்கொடியொன்றும், 6 தங்கச்சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரகள், திருகோணமலை, மட்டக்களப்பு, செங்கலடி, கல்லடி பகுதிகளை சேர்ந்தவர்கள் என யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.