வவுனியாவில் இருந்து அனைத்து இடங்களுக்கும் பஸ் சேவை!!

425

Busபுகையிரத ஊழியாகளின் பணி பகிஸ்கரிப்பினைத் தொடர்ந்து பயணிகளின் வசதி கருத்தி வவுனியாவில் இருந்த அனைத்து இடங்களுக்கும் பஸ் வசதிகளை இன்று முதல் (16) ஏற்பாடு செய்துள்ளதாக வவனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரி.ஸ் இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பஸ் சேவைகள் புகையிரத ஊழியாகளின் பணி பகிஸ்கரிப்பு நிறைவு பெறும் வரை இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே வவுனியாவில் இருந்து தூர இடங்களுக்கான தனியார் பஸ் சேவை இடம்பெறும் இரண்டாம் குறுக்குத் தெருவில் பயணிகள் தமது பிரதேசங்களுக்கான பஸ் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.