திருகோணமலையில் இளைஞர் ஒருவர் திடீர் மரணம்!!

410

அன்பழகன் தனூசியன்..

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென்று ம ரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உ யிரிழந்தவர் மனையாவெளியை அண்மித்த பகுதியைச் சேர்ந்த அன்பழகன் தனூசியன் (19வயது) எனவும் தெரியவருகின்றது.

வவுனியாவிலிருந்து சக உறவினர்கள் திருகோணமலைக்கு சுற்றுலா வருகை தந்திருந்த போது அதில் வந்த ஒருவர் தொலைபேசியில் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் திடீரென தொலைபேசி துண்டிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அவரது வீட்டுக்கு அருகே சென்றபோது தவறுதலாக விழுந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்ததாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

உ யிரிழந்த இளைஞரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பி ரேத ப ரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.