பட்டம்விடும் திருவிழாவில்..
தாய்வானின் பட்டம் விடும் திருவிழாவில் 3 வயது சிறுமி பட்டத்தோடு வானில் பறந்த சம்பவம் பட்ட திருவிழாவை பார்த்துக் கொண்டிருந்தவர்களை பதைபதைப்புக்கு ஆளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தாய்வானின் நானிலியோ பகுதியில் பட்டம் விடும் விழா நடைபெற்றது. இதில் பறந்த ராட்சத பட்டத்தின் வாலில் அங்கு நின்றுகொண்டிருந்த மூன்று வயது சிறுமி சிக்கி பட்டத்தின் வால் மேலெழும்ப, அவளும் வானை நோக்கி சென்றாள்.
சிறுமி பயந்து அ லறியபோதிலும், அவள் பட்டத்தை விடவில்லை. சிறுமியை ஒரு சுழற்று சுழற்றி பட்டத்தின் வால் தரையை நோக்கி வர, காத்திருந்த மக்கள் அவளைப் பிடித்துக்கொண்டனர்.
என்றாலும், சிறுமிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதால் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாள்.இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து பட்டம் விடும் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.
குழந்தைகள் விஷயத்தில் நாம் அதிக கவனமாக இருக்கவேண்டுமென்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Don’t let kid doing kite alone. Btw the girl is safe and alive. Location Nanliao Fishing Harbor, Taiwan pic.twitter.com/cwczuWa5PY
— Banana for scale ?? (@scale_banana) August 30, 2020