யாழில் கோர விபத்து : இளம் குடும்ப பெண் பரிதாபமாக ப லி!!

901


கோர விபத்து..



யாழ்ப்பாணம் – கட்டப்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஒரு இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளர்.



நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.




கட்டப்பிராய் பகுதி ஊடாக பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளைச் செலுத்த முற்பட்டபோது பிரதான வீதியில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த பெண் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வியங்காடு – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.