சவுதியில் கொரோனாவினால் 28 இலங்கையர்கள் ம ரணம்!!

1082

சவுதியில்..

சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் உ யிரிழந்து ள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

கடந்த நான்கு மாதங்களில் இந்த ம ரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குகின்றனர். உ யிரிழந்தவர்களின் சடலங்கள் அந்த நாட்டினதும், சர்வதேசத்தின் சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,287 ஆக அதிகரித்துள்ளதுடன் 185 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 3,088 ஆக உயர்வடைந்துள்ளது.