தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் போது இளைஞருக்கு ஏற்பட்ட வி பரீதம்!!

1030

தேங்காய் பறிக்கும் போது..

குருநாகல், இப்பாகமுவ பகுதியில், நேற்றையதினம் மின்சாரம் பாய்ந்து இளைஞரொருவர் உ யிரிழந்து ள்ளார். மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஏறாவூர் மக்காமடி ஆதம்லெப்பை குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் 19 வயதுடைய தாவூத் சலீம் முஹம்மது றிபான் என்ற இளைஞரே சம்பவத்தில் ப லியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் இளநீர் விற்கும் தொழிலை மேற்கொண்டுவருவதாகவும், இதற்காக அவர் இளநீர் உற்பத்தியாகும் குருநாகல் போன்ற பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தானே மரத்தில் ஏறி இளநீர்க் குலைகளைப் பறித்து வந்து விற்பனை செய்துவருவதாகவும்,

இதற்காக தென்னை மரத்தில் ஏறியபோதே அவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து ப லியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் பாய்ந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது அவர் வழியிலேயே உ யிரிழந்து ள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்த வரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் ஏறாவூருக்கு எடுத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவம்பற்றி மேலதிக வி சாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.