கொழும்பில் உடையும் அபாயத்தில் கட்டடம் : அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்!!

1500

கொழும்பில்..

கொழும்பு, கொள்ளுபிட்டியில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை கட்டடத்தின் ஊழியர்கள் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டடத்தின் சுவரில் ஏற்பட்ட பிளவு காரணமாக அ ச்சத்தில் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். கட்டடம் தாழிறங்கும் அபாயம் காணப்படும் அச்சத்திலேயே ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டடத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படுகின்ற புதிய கட்டட நிர்மாண பணிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.