இந்திய கப்பலில் இலங்கை வந்த 17 பேருக்கு கொரோனா!!

453

கொரோனா..

இந்தியாவில் இருந்து வந்து திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு எண்ணெயை ஏற்றி வந்த கப்பலில் பணியாற்றும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரஜைகளான இவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் இது உறுதியானதாக திருகோணமலை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தொற்று தொடர்பான விசேட மருத்துவ அதிகாரி ரி.திலோஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி வந்த இந்த கப்பலில் தொழில் புரியும் ஊழியர் ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து, அதில் பணியாற்றிய ஏனையோருக்கும் PCR பரிசோதனை நடத்தப்பட்டது எனவும் மருத்துவர் திலோஜன் குறிப்பிட்டுள்ளார்.