கோர விபத்தில் தந்தையும் மகளும் பலி!!

906

கோர விபத்தில்..

அனுராதபுரம் -குருணாகல் பிரதான வீதியில் ஷாவஸ்த்திபுர பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உ யிரிழந்து ள்ளனர்.

முச்சக்கர வண்டியும் மருத்துவர் ஒருவர் ஓட்டிய காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்து ள்ளார்.

வண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்த தந்தை, அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் தலாவ பிரதேசத்தை சேர்ந்த 60வயதான நபரும் அவரது 28 வயதான மகளுமே சம்பவத்தில் உ யிரிழந்து ள்ளனர். சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.