ஜனாதிபதி எடுத்துள்ள மற்றுமொரு நடவடிக்கை!!

825

ஜனாதிபதி..

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பா துகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்கமைய, பெரிய மற்றும் சிறிய அளவிலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் உடனடியாக உயர் தரத்திலான துணிகளை உற்பத்தி செய்வதற்கு ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பை அண்மித்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களை இன்று பார்வையிட்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

பாடசாலை சீருடைக்கான கூப்பன் முறைமை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக பெரிய அளவிலான மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட துணி உற்பத்தி நிறுவனங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பெருமளவானவர்கள் தொழிலை இழக்க நேரிட்டதாகவும் ஜனாதிபதியிடம் துணி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செலவில் 68 வீதத்தினை மீதப்படுத்த முடியுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூர் உற்பத்திகளை வாங்குவதன் மூலம் கல்வி அமைச்சினால் ஆண்டுக்கு 80 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாரும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இவற்றைத் தயாரிப்பதற்கான பொருட்களை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.