பயணிகளின் உயிரை பணயம் வைத்த சாரதி : கடும் அதிருப்தியில் பொதுமக்கள்!!

2527

தென்னிலங்கையில் சாரதி ஒருவரின் மோசமான செயற்பாடு குறித்து பயணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தெற்கு பயாகல ரயில் வீதி மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அதனை கருத்திற்கொள்ளாமல் ரயில் கடவையில் பேருந்தை ஓட்டிய சாரதி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 5.16 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியின் ஊடாக ரயில் ஒன்று வருவதற்காக வீதிகள் மூடப்பட்டு சமிக்ஞை காட்டப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காவல் இருந்தன.

எனினும் தனியார் சொகுசு பஸ் சாரதி ஒருவர் ஆபத்தினை கூட கருத்திற்கொள்ளாமல் ரயில் கடவையை கடந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் ரயில் கடவையை கடக்க முற்பட்டுள்ளனர். இது தொடர்பான காணாளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பயணிகளின் உயிர்களை பணயம் வைத்த சாரதியை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.