கிளிநொச்சியில் மரம் முறிந்து விழுந்து வீடொன்று சேதம்!!

540


கிளிநொச்சியில்..



கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் கடை ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன், வீடொன்றும் பகுதியளவு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய பெய்த மழை காரணமாக பாரிய மாமரம் ஒன்றே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது.




இதன்போது அருகில் இருந்த தச்சுப் பட்டறை ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன், அருகிலிருந்த வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.