பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

1587

பாடசாலை விடுமுறை..

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் 2020ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது.

இதேவேளை,க.பொ.த உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 12ம் திகதி முதல் நவம்பர் 6ம் திகதி வரை க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.