கொழும்பை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து!!

563

மற்றுமொரு ஆபத்து..

இந்த வருடம் அதிகமான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுமத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முமையான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 27,733 ஆகும். அதில் 3675 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 3040 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் ஒரு டெங்கு நோயாளியேனும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

மழையுடனாக காலநிலை அதிகரித்துள்ளதனை டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர். நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதனை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வருடத்தில் இதுவரை காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 பேர் உ யிரிழந்து ள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போதைய மழைக் காலம் என்பதால் கொழும்பில் மேலும் பல டெங்கு நோயாளர்கள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.