பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை : அதிர்ச்சி வாக்குமூலம்!!

319

Abuseதனது தந்தையாலே பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பொலிசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 2 முறை மர்ம நபர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், இவரது தந்தையே அவரை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் தந்தை தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இந்த சம்பவத்தை வெளியே கூறினால் தம்மை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இவருடைய தந்தை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது குறித்த மாணவி தன்னார்வ குழுவின் பாதுகாப்பில் இருக்கின்றார்.

தான் இதுபற்றி அறிந்திருக்கவில்லை என்றும், அவருக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.