சமூக மட்டத்தில் மீண்டும் கொரோனா : கொழும்பு, கம்பஹாவில் அமுலாகும் தடை!!

673

மீண்டும் கொரோனா..

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், நாளை முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் பொருந்தும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கும் மீள் அறிவிப்பு வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.