இலங்கையில் மீண்டும் கொரோனா : கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்!!

662


மீண்டும் கொரோனா..



இலங்கையில் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா பரவலையடுத்து, கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இவ் ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும், விமான நிலைய நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.




அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் மற்றும் வருகை தரும் முனையங்களில் அமைந்துள்ள வணிக நிலையங்களுக்கான வெளியாட்கள் நுழைவுக்கு பிற்பகல் 12.00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகம் விமான நிலையத்தின் வருகை முனையம் மற்றும் வருகை முனையத்தின் நுழைவாயிலை மூடுவதற்கும், பொதுமக்கள் பார்வையாளர் அரங்கம் மற்றும் ஓய்வறைகள் என்பவற்றை மூடுவது தொடர்பான தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளது.