புகையிரதங்களில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக அமுலாகும் புதிய சட்டம்!!

507

முகக்கவசம்..

கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக பயணிகள் முகக்கவசம் அணிதல் முக்கியமானது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் காணப்படும் அ ச்சுறுத்தலான நிலைமை காரணமாக பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சகல தொடரூந்து நிலையங்களிலும் முன்னர் அறிவிக்கட்டப்பட்டவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அதனை தவறுபவர்களை தொடருந்து நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் தொடருந்து திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டதினைத் தொடர்ந்தே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.