சில நாட்கள் காய்ச்சல் : சிகிச்சை பலனின்றி மாணவன் உ யிரிழப்பு!!

632

சில நாட்கள் காய்ச்சல்..

காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று ம ரணமடைந்துள்ளார். வாழைச்சேனையில் உள்ள பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்றுவந்த 13 வயதுடைய, பதுரியா குறுக்கு வீதி பிறைந்துறைச்சேனையை சேர்ந்த சமீம் முகம்மட் சஜாத் எனும் மாணவனே உ யிரிழந்து ள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளபோதும் குறித்த மாணவன் இன்று ம ரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.