மீண்டும் நாடு முடக்கப்படுமா? : தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் விளக்கம்!!

634

மீண்டும் நாடு முடக்கப்படுமா?

கம்பஹா – திவுலப்பிட்டி பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலையில் குறித்த பெண்ணுடன் தொழிபுரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே எதிர்வரும் அடுத்து நாட்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையிலேயே நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.