இலங்கையில் மீண்டும் கொரோனா : 1300 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!!

774

மீண்டும் கொரோனா..

திவுலபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1,300 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்காக, தற்போது அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.