மறு அறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகளுக்கு பூட்டு!!

1061

விமான நிலையத்தின்..

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை தரும் மற்றும் வெளியேறும் பிரதேசங்கள், பொதுமக்கள் பார்வையிடும் கலரி ஆகியவை மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக இலங்கையின் விமான நிலைய விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமணசேகர அறிவித்துள்ளார். மேலும் கூறியுள்ளதாவது,

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக கடைகளுக்கு பயணிகளை அனுமதிப்பதும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இது வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வந்துள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களிலுள்ளவர்களுக்கும் இந்தக் கட்டப்பாடுகள் உள்ளது.

அத்துடன், விமானநிலையத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.