கையில் காயமடைந்த டில்ஷான் நாடு திரும்பினார்!!

630

Dilshan

பங்களாதேஷூடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியின்போது திலகரட்ண தில்ஷான் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக அவர் இன்று நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

திலகரட்ண டில்ஷானின் கையில் நேற்றைய போட்டியின்போது உபாதை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திலகரட்ண டில்ஷானுக்கு பதிலாக லகிரு திரிமன்னே விளையாடவுள்ளார்.