வவுனியா பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விசேட அறிவித்தல்!!

2058


விசேட அறிவித்தல்..



நாட்டில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விசேட அறிவித்தலை இன்று(06.10) வழங்கி வருகின்றார்கள்.



கம்பஹா ஆடைத் தொழில்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய நிலையில் வவுனியாவிலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.




இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பேணுமாறு வவுனியா பொலிசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.


அத்துடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளானோருடன் தனிமைப்படுத்தல் காலத்தில் நேரடி தொடர்புளை பேண வேண்டாம் எனவும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்துவதுடன் மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் அறிவுறுத்தி வருகின்றனர்.