கம்பஹாவில் முழுமையாக முடக்கப்பட்ட 15 பகுதிகள் : ஊரடங்கு சட்டம் அமுல்!!

885


கம்பஹாவில்..



கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 15 பகுதிகளில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நேற்றைய தினம் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளில் தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




நேற்று முன்தினம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதிகளில் இன்று மாலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையிலேயே இன்று மாலையில் இருந்து மீளவும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரையில் குறித்த தொழிற்சாலையில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 569 என உறுதி செய்யப்பட்டுள்ளது.