கொழும்பு ஐ.சி.பி.டி உயர்கல்வி நிறுவன மாணவருக்கு கொரோனா உறுதி!!

585

கொரோனா..

கொழும்பில் உள்ள ஐ.சி.பி.டி தனியார் உயர் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.சி.பி.டி தனியார் உயர்கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தில் கல்விகற்கும் குறித்த மாணவர் கடந்த 4ஆம் திகதி கொழும்பிலுள்ள உயர்கல்வி நிறுவனத்திற்கு வருகைதந்திருக்கின்றார்.

வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகவும் குறித்த மாணவரின் வகுப்பைச் சேர்ந்த ஏனைய மாணவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் உடனடியாகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லது அதற்குப் பின்னர் கொழும்பிலுள்ள குறித்த உயர்கல்வி நிறுவனத்திற்கு எவரேனும் வருகைதந்திருப்பின் உடனடியாக அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு குறித்த நிறுவனம் வலியுறுத்தியிருக்கின்றது.