மன்னாரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

1006

கொரோனா தொற்று..

மன்னார் மாவட்டத்தில் மத ஸ்தாபனம் ஒன்றில் பணி புரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்படுள்ளது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுநேரிய பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.

இந்த நிலையில் குறித்த மத ஸ்தாபனம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த நபரை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் மக்கள் காரணம் இன்றி வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன், சமூக இடைவெளி மற்றும் முக கவசங்களை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுள்ளது.