
தன்னிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனரை கன்னத்தில் அறைந்துள்ளார் பிரபல பொலிவுட் நடிகை.
மும்பையைச் சேர்ந்தவர் கீதிகாதியாகி(24), பத்திரிகையாளராக இருந்து நடிகையாக அறிமுகமானார். ஒன்-பை-டூ, வாட் தி பிஷ் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜோலி எல்.எல்.பி.என்ற இந்தி படத்தினை இயக்கி வரும் சுபாஷ்கபூர், கடந்த ஒரு வருடங்களுக்கு கீதிகாவிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது இயக்குனரை கன்னத்தில் கீதிகா அறைவது போன்ற வீடியோ, தற்போது வெளியாகியுள்ளது.
இதனை படம் பிடித்து வெளியிட்டது ஒரு நடிகர் என்பதும் தெரியவந்துள்ளது, இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




