இரண்டு தாதியருக்கு கொரோனா தொற்று உறுதி!!

902

கொரோனா..

ஹொரணை மருத்துவமனையில் சேவையாற்றும் இரண்டு தாதிமாருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மருத்துவமனையின் 5 மற்றும் 9 ஆம் விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்த இரண்டு தாதியரில் ஒருவரின் கணவர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் சேவையாற்றும் நபர் எனவும் அவருக்கு, அவரது குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ஹொரணை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டு தாதியர் உட்பட நால்வரும் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மற்றும் ஐ.டி.எச் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.