வவுனியாவில் சுகாதார நடைமுறைகளுடன் புலமைப்பரிசில் பரீட்சை!!

1320

புலமைப்பரிசில் பரீட்சை..

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (11.10.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு சுமார் 3 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றதுடன் பரீட்சை 2,936 மத்திய நிலையங்களில் நடைபெறுகின்றது

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் 3002 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றனர்.

கடந்த இரு தினங்களாக பரீட்சை மண்டபங்கள் தொற்று நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் பிரயோகப்படுத்தப்படடுள்ளது.

மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம் , உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்படுகின்றன.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளின் நன்மை கருதி பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.