வவுனியாவில் மீன்பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!!

1073

மீன்பிடிக்க சென்றவருக்கு..

வவுனியா மணியர்குளம் பகுதியில் குளத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்தநபர் மற்றுமொரு நபருடன் நேற்று (10.10.2020) காலை 7 மணியளவில் மணியர்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

இந்நிலையில் மீன்பிடித்து கொண்டிருந்தவரை காணாத அவரது நண்பர் தே டிச்சென்று பார்த்த போது அவர் குளத்தில் ச டலமாக கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கறுப்பையா செல்வராசா வயது 50 என்ற நபரே பலியாகியுள்ளார்.

ச டலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சட்ட வைத்திய ப ரிசோத னைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்