தனது திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள சென்ற மணப்பெண் : நொடிப்பொழுதில் முடிந்து போன அவர் வாழ்க்கை!!

875

ஜமுனா..

தனது திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சாலை விபத்தில் உ யிரிழந்து ள்ளது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமுனா (24). இவர் பெங்களூரு மாதேவபுரா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் ஜமுனாவுக்கும், திருப்பத்தூர் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து மொபட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் திருப்பத்தூருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.

ஓசூர் அருகே குமுதேப்பள்ளி என்ற இடத்தில் அவர்கள் சென்றபோது முன்னால் சென்ற லொரி மீது மொபட் மோதியது. இந்த விபத்தில் தலையில் ப லத்த கா யமடைந்து இர த்த வெ ள்ளத்தில் ஜமுனா சம்பவ இ டத்திலேயே ப லியானார்.

அவரது தாயார் வனிதாவுக்கு காலில் ப லத்த கா யம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.