கனடாவில் கடந்த 8ஆம் திகதி கா ணாமல்போன தமிழ்ப் பெண் : பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!!

623

கனடாவில்..

கனடாவில் கடந்த எட்டாம் திகதி கா ணாமல்போன தமிழ் பெண் தொடர்பில் Toronto பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி குறித்த பெண் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கனடா – Toronto பகுதியில் வசிக்கும் ரோஜா ஸ்ரீதரன் எனும் குறித்த பெண் கடந்த எட்டாம் திகதி காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டிருந்த தகவலில் Warden Ave and Eglinton Ave E பகுதியில் அவர் இறுதியாக காணப்பட்டதாகவும், இதன்போது அவர் அணிந்திருந்த உடைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு பொலிஸார் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.