வவுனியா பொலிசாரால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!!

923

வவுனியா பொலிசாரால்..

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொலிசார் பொதுமக்கள் நல்லுறவு பிரிவினரால் ஐந்து கிராம அலுவலர் பிரிவை உள்ளடக்கிய வறுமைக்கோட்டிற்குட்பட்ட 5 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று(13.10) வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய வளாகத்தில் அதன் பொறுப்பதிகாரி மானவடு தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உதவித்திட்டத்தினை வழங்கிவைத்தனர்.