டோனியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவு!!

935

Dhoniவெளியூர் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அணித்தலைவர் டோனி, பயிற்சியாளர் பிளட்சரிடம் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் விசாரிக்க உள்ளனர்.

கடந்த 2011ல் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆனார் சிம்பாவேயின் டங்கன் பிளட்சர். அன்று முதல் இன்று வரை அன்னிய மண்ணில் தொடர்ந்து தோல்வி தான் கிடைத்து வருகிறது.

இங்கிலாந்துடன் 0–4, அவுஸ்திரேலியாவுடன் 0–4 என, டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தென் ஆபிரிக்கா (0–1) மற்றும் பலம் குறைந்த நியூசிலாந்திலும் (0–1) கோட்டை விட்டு திரும்பியது.

இதனால் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து டோனி, பயிற்சியாளர் பிளட்சர் என்று இருவரையம் நீக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அன்னிய மண்ணில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் குறித்து இருவரிடமும் விசாரிக்கவுள்ளதாக தெரிகிறது.

தவிர, வரும் 28ம் திகதி புவனேஸ்வரில் நடக்க உள்ள பி.சி.சி.ஐ. செயற்குழு கூட்டத்திலும இப்பிரச்னை பற்றி விவாதிக்கப்பட உளளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை(பி.சி.சி.ஐ) நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், அணியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், எங்கு தவறு நடக்கிறது என்பதை அறிந்து, இதைச் சரிசெய்ய என்ன தேவை என்று முடிவு செய்ய வேண்டும் என்றார்.