பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : மீண்டும் கொரோனா நிதியுதவி!!

2343

கொரோனா நிதியுதவி..

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக கொரோனா அ ச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.