கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு தொடக்கம் ஊரடங்கு உத்தரவு!!

740

ஊரடங்கு உத்தரவு..

கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு சட்டம் ஹம்பகா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதுநாள் வரையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக காணப்பட்ட பிரதேசங்களில் மட்டுமே ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் அநேக நாட்கள் ஊரடங்கில் இருந்த மாவட்டமாக கம்பஹா மாவட்டமே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.