புகையிரத பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

703


முக்கிய அறிவிப்பு..



அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில்களை பயன்படுத்துமாறு ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.



ரயிலில் பயணிப்பவர்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என பிரதான பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.




அத்துடன் பயணிகளின் குறைவு காரணமாக நகரங்களுக்கு இடையிலான சில ரயில் பயணங்கள் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளன.