கொரோனா தொற்றால் இலங்கையில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு!!

825

கொரோனா..

கொரோனா தொற்றால் இலங்கையில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.